இந்த நூலிலுள்ள கட்டுரைகளை எழுதி சுமாராக ஒரு தசாப்தம் ஆகிறது.இன்றைய என் மனநிலையில் இதை நான் எழுதியிருக்க சாத்தியமே இல்லை. காரணம், நான் என்னைச் சுற்றியுள்ள மனித வாழ்விலிருந்து விலகி,ஒரு தவசியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் திட்டமிட்டுள்ள புனைவுகளை எழுதி முடிப்பதில் மட்டுமே என் கவனம் குவித்து கிடக்கிறது. இப்போது இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது எனக்குள் ஒரு நடுக்கம் உண்டாகிறது. என்னை எப்படி உயிரோடு விட்டு வைத்தார்கள் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது.தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலக்கியம் தெரியாது என்பதனால் பிழைத்தேன்...
Be the first to rate this book.