எண்களாலானது பிரபஞ்சம். காலம், பேரண்டம், பெருவெளி என எல்லாமே எண்களாலானது.குருட்டுத்தனமாக எதையும் சொல்லிவிட எண்களாலான உலகம் அனுமதிக்காது. சமன்பாடுகள் கேட்கும். காரணங்கள் கேட்கும். அது எப்படி எண்களுடன் பொருந்துகிறது என்று கேட்கும். அதை நிரூபிக்கச்சொல்லும். அதன் விளைவுகளைச் சரிபார்க்கும்.
இக்காலத்தை மட்டுமல்ல. இனி வர இருக்கும் எதிர்காலத்தையும் செயற்கை நுண்ணறிவும், விண்வெளி ஏகும் முயல்வுகளும், தொழில் நுட்பத்தை இறுக அரவணைத்த மருத்துவமும் ஆக்ரமிக்க இருக்கின்றன. அறிவியலும் கணிதமும் இனி வரும் காலகட்டங்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளாகப்போகின்றன. அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அக்காலகட்டத்தை எதிர்கொள்ளத் தேவையான கணித மற்றும் அறிவியல் பார்வைகளை, கண்ணோட்டங்களை பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் பழக்கப்படுத்த வேண்டிய தேவையும், கட்டாயமும் நமக்கிருக்கிறது.
அதனைக் கதையாடல்கள் மூலம் சாத்தியப்படுத்துவது எளிது மட்டுமல்ல, அதுதான் சரியான அணுகுமுறையும் கூட என்பது என் வாதம்.
'கம்ப்யூட்டா' சிறார்களுக்கான கணிதச் சிறுகதைத் தொகுதி. இத்தொகுதியில் பத்து கணிதச் சிறுகதைகள் பங்கு பெறுகின்றன. இக்கதைகள் எந்தக் கணிதக் கோட்பாட்டைப் பற்றிப் பேசுகின்றன என்று கண்டுபிடிப்பதை ஒரு பயிற்சியாக வாசகர்கள் எடுத்துக்கொள்வதில் சுவாரஸ்யம் கூடும் என்றே எண்ணுகிறேன்.
Be the first to rate this book.