சீனு ராமசாமி, இயக்குநர் பாலுமகேந்திரா எனும் மாபெரும் ஆலமரத்தின் நிழலில் வளர்ந்த விழுது இவர். ஆசான் வழியாக ‘ஒளி’ என்பது வெறும் வெளிச்சம் அல்ல, அது மனிதர்களின் துயரத்தையும், புன்னகையையும் தொட்டுத் துலக்கும் ஒரு தெய்வீகக் கருவி என்பதை உணர்ந்தவர். “கலை மக்களுக்காக” என்ற ஆணித்தரமான கொள்கையைத் தன் நெஞ்சில் சுமந்து, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும், அவர்களின் எளிய அறத்தையும் எவ்வித சமரசமும் இன்றித் திரையில் பதிவு செய்பவர். குழந்தைகளின் உலகமே ஒரு பெரும் ஆச்சரியம் நிறைந்தது. அவர்களுக்குத் தர்க்கங்கள் தேவையில்லை, உணர்வுகள் மட்டுமே போதும். அவர்களின் ஆரம்பக் கல்வியிலேயே சினிமாவை ஒரு பாடமாக இணைப்பது இந்தக் காலகட்டத்தின் அவசரத் தேவை.
இயந்திரத்தனமான மனப்பாடக் கல்வியிலிருந்து அவர்களை விடுவித்து, வாழ்க்கை என்றால் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்த சினிமா ஒரு பெரும் கருவியாகச் செயல்படும். சினிமாவை பள்ளிச் சிறார்களுக்கு ரசனைக் கல்வியாக, ஒரு வாழ்வியல் தரிசனமாகக் கொண்டு சேர்க்கும் இவரது இந்த முயற்சி, அடுத்த தலைமுறையை இன்னும் கூடுதல் அன்போடும், ஈரத்தோடும் வளர்த் தெடுக்கும் ஒரு உன்னத கலைப் பயணம்.
- சந்தியா நடராஜன்
Be the first to rate this book.