எப்படியாவது மனிதனை மனிதனுக்கு விளக்கிவிட முயன்று கொண்டேயிருக்கிறது. சோசோ அப்படியான முயற்சிதான். சோசோவுக்குள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு விதங்களில் நாம் இருக்கலாம். இன்னமும்கூட சோசோவுக்கு பன்முகங்களும் இருக்கலாம். நமக்குள் இருக்கும் சோசோவை நாம் கண்டறியும் முயற்சி. சோசோ அந்த முயற்சிக்குத் துணைசெய்வான். சோசோவைச் சந்தியுங்கள்! எதிர்பாராமல் உங்களைச் சந்திப்பீர்கள்!
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.