இரண்டாம் உலகப் போர் உருவான சமயத்தில், செந்த் - எக்சுபெரி மீண்டும் பிரெஞ்சு விமானப்படையில் இணைந்துகொண்டார். 1940இல் நாஜி துருப்புக்கள் பிரான்ஸைக் கைப்பற்றிய பிறகு, அவர் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். அங்கு அந்நாட்டின் போர் முயற்சியில் தானும் ஒரு போர் விமானியாக இணைந்து பணியாற்ற விரும்பினார். ஆனால் அவரது வயது மூப்பின் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தனக்குத்தானே ஆறுதல் கொள்ளும்படியாக, சாகாரா பாலைவனத்தில் தான் சந்தித்த சாகசங்களை முன்வைத்து, ‘தி லிட்டில் பிரின்ஸ்’(1943) என்னும் நூலை எழுதினார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரது மனங்களையும் கவர்கின்ற வகையில் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்ற புதிர்களும் சாகசங்களும் இவரை மிகவும் பிரபலமடையச் செய்திருக்கிறது. இன்றளவும் இந்தப் புத்தகம் உயிர்ப்புடனே இருந்து பலராலும் வாசிக்கப்படுகிறது.
Be the first to rate this book.