பேராசிரியப் பெருந்தகை. சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர். சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்: பேச்சாலும் எழுத்தாலும் பிறர்உள்ளம் சுவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்: ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர்; ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர்; தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்: நாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஒளவை சு.துரைசாமி பிள்ளை, பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் உரைவேந்தர்" என்பதே இறுதிவரை நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது, மதுரைத் திருவள்ளுவர் கழகம்.
Be the first to rate this book.