சாணக்கியா பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் சிந்தனையாளர் மற்றும் நுணுக்கம் அறிந்தவர். ஆனால் இன்று வரை இந்த அரசியல் அறிவு மேதையின் ஒழுக்கம் குறித்த பார்வைகள் வெளிவராமலேயே போய்விட்டன என்பதுதான் உண்மை. சாணக்கியரின் அறிவுப்பூர்வமான விளக்கங்கள் மாற்ற முடியாதவை. காலத்தைக் கடந்து நிற்பவை. இப்படிப்பட்ட ஒரு தார்மீக குறியீட்டின் இன்றைய தேவையையும், நிரந்தர தன்மையையும், பலவந்தமாக வலியுறுத்துகிறது இந்தப் புத்தகம். ஆச்சர்யமான தீர்க்கத் தரிசனத்துடனும், தெளிவுடனும் தன் பார்வையை விவரித்திருக்கிறார் சாணக்கியா.
பெண்கள், குடும்பம், மனித உறவுகள், ஒழுக்க குணம், ஆன்மீகம் போன்றவற்றைப் பற்றியும் தன்னுடைய பார்வையைக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய திடுக்கிடச் செய்யும் கணிப்புகள், தினசரி வாழ்க்கையின் கடினமான உண்மைகள், அதன் அர்த்தமுள்ள பிரதிபலிப்புகள் யாவும் சேர்ந்து இந்தப் புத்தகத்தை அழகும், அர்த்தமும் சேர்ந்த ஒரு செழிப்பான களஞ்சியமாக்கியுள்ளது.
Be the first to rate this book.