பேரரசன் சந்திரகுப்தனின் அன்பிற்குரிய ஆசானாக விளங்கிய சாணக்கியரின் வாழ்க்கை எவ்வளவு ஞானம் பொதிந்ததாக விளங்கியதோ, அதே அளவு மர்ம முடிச்சுகளால் அது பின்னப்பட்டிருந்தது. அவர் தன் சொல்லையும் செயலையும் துல்லியமாகத் திட்டமிட்டு நிறைவேற்றினார். ஒரு செம்மையான வாழ்க்கைக்கான முக்கியப் படிப்பினைகளைத் தானே அவற்றுக்கான ஒரு முன்னுதாரணமாக இருந்து சாணக்கியர் கற்றுக் கொடுத்தார். இந்த அற்புதமான புத்தகத்தின் மூலம் பிரபலநூலாசிரியரான ராதாகிருஷ்ணன் பிள்ளையும் அதையே செய்கிறார்.
'சாணக்கியர் கதைகள்' எனும் இப்புத்தகம் அந்த மாபெரும் ஆச்சாரியாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த கதைகளை எடுத்துரைக்கிறது. அதோடு, இந்தியாவின் மிகச் சிறந்த ராஜதந்திரியும் முன்னோக்குச் சிந்தனையாளருமான அவருடைய கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளைத் தற்போதைய காலகட்டத்திற்குள் அது பொருத்திப் பார்க்கிறது. இதில் கூறப்பட்டுள்ள கதைகளில் சில உண்மையானவை, சில கற்பனையானவை. ஆனால், ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்தத் தடுமாற்றமாக இருந்தாலும் சரி, ஊழலை முற்றிலுமாக ஒழிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு மிகப் பெரிய எதிரியைத் தோற்கடிப்பதாக இருந்தாலும் சரி, இக்கதைகள் அனைத்தும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்துகின்றவிதத்திலேயே அமைந்துள்ளன என்பது இந்நூலின் சிறப்பு.
“உங்கள் கனவையும் குறிக்கோனையும் நனவாக்குவதற்குச் 'சாணக்கியர் கதைகள்' உங்களுக்கு உதவும்.”
Be the first to rate this book.