குழந்தைகளுக்குக் கதை சொல்வதுதான் மிகவும் கடினமான விஷயம். படிக்கத் தூண்டும் வகையில் கதைக் களத்தை அமைத்து அதைச் சுவாரசியம் குறையாமல் நகர்த்திச் செல்லும் வகையில் சமகாலத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஃபேன்டசி கதை என்று இந்நூலை உறுதியாகச் சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் அடுத்து என்ன நடக்கும் என்று கதையை விட்டு நகரவிடாமல் செய்யும் மாயாஜாலத்தைத் தன் கதை சொல்லும் திறமையில் ஒளித்து வைத்திருக்கிறார் பூவிதழ் உமேஷ். அவரின் குழந்தைகளுக்கான மற்ற நூல்களைப் போலவே இந்த நூலும் தனித்துவமாக எழுதப்பட்டுள்ளது.
Be the first to rate this book.