போன்சாய் மரம் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சூழலியல் சார்ந்த கருத்துகளுடன் முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய மாய யதார்த்தக் கதைகளாக, ஒரு கதம்ப மாலையைப் போலக் குழந்தைகள் கைகளுக்குக் கிடைத்துள்ளன என்பது சிறப்பு.
குழந்தைகள் உளவியலைப் புரிந்து, சமூகப் பிரச்சனை களைக் கதைகள் வழியே அவர்கள் கைகளில் கொண்டு சேர்த்தல் இன்றைய அவசியத் தேவை என்பதை உணர்ந்து கதைகளைத் தரும் சரிதா ஜோவின் பாய்ச்சல் பாராட்டத்தக்கது.
- கொ.மா.கோ. இளங்கோ சிறார் எழுத்தாளர்
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.