ஓவியரும் வரைகலைக் கலைஞருமான (Graphic desinger) அந்தோணி குருஸின் வாழ்க்கைப் பயணம், அவர் வரையும் கோடுகளையும் அவை பயணிக்கும் திசைகளையும் போலவே கணிக்க முடியாதது. புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த அவர், அங்குள்ள கத்தோலிக்க மிஷனரி பள்ளிகளில் பயின்றார். குருத்துவப் படிப்பு அவருக்குக் கைகூடாத நிலையில் கலைத்துறையை நோக்கித் திரும்பினார்.
ஆரம்பத்தில் ஸ்டிஆர்ட்டிஸ்டாகவும், பேனர் டிசைனராகவும் பணியாற்றிய அந்தோணி, அதன் பிறகு சென்னையில் உள்ள முன்னணி அச்சகம் ஒன்றில் 'பேஜிவேட்டராக' (Paginator இணைந்தார். அங்குதான் புத்தக உருவாக்கம், வரைகலை ஆகியவை குறித்த அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். கடின உழைப்பால் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் இடம்பெற்று அங்கு விஷு கம்யூனிகேஷன் துறையில் முதுகலைப் பட்டம் (MFA) பெற்றார். அக் கல்லூரியின் உத்வேகமளிக்கும் சூழலில், அவருக்கு ஓவியம், சிற்பக்கலை, இல்லஸ்ட்ரேஷன் (lustration மீது ஆர்வம் பிறந்தது தொழில்துறையில் நல்ல அனுபவம் கொண்ட பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தபோதிலும், கல்வி ஆராய்ச்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (Mphil பட்டத்தைப் பெற்றார். அவரது ஆராய்ச்சி, அதன் தனித்தன்மைக்காகவும் கலைத்திறனுக்காகவும் தனித்து நின்றது. தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்றுவருகிறார் கலைஞனின் கண்ணியம், வரலாறு மீதான பார்வையும், சக மனிதர்கள் மீதான அக்கறையுமே அந்தோணி குருவின் கலைப்படைப்புகளுக்கு உயிர் கொடுக்கின்றன.
Be the first to rate this book.