இலக்கியப் படைப்புகளைப் புனிதமாகப் போற்றிய பண்டைத் தமிழர் மரபு, இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது. இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு, காலந்தோறும் நிலவுவதைப் படைப்புகளுக்குள் ஒலிக்கின்ற பல்வேறு குரல்களின்மூலம் அவதானிக்க முடிகின்றது. அரசியல் இல்லாமல் எதுவுமில்லை என்ற புரிதலுடன் இலக்கியப் படைப்புகளை விமர்சிக்கும்போது பிரதிக்குள் பொதிந்திருக்கிற அரசியலைக் கண்டறிந்திட முடியும். அரசியல் என்பது தீண்டத்தகாதது என்ற கருத்தியல் பின்புலத்தில், உன்னத இலக்கியம் என்ற பெயரில் படைப்பைத் தனித்த வஸ்துவாக்கி, கொஞ்சுகின்ற இலக்கிய ஆர்வலர்களின் செயல்களுக்குப் பின்னர் அரசியல் பொதிந்திருப்பதுதான் உண்மை. கடந்த நூற்றாண்டில் தனித்து விளங்கிய பாரதியார், பாரதிதாசன் தொடங்கி, சமகால இலக்கியத்தை முன்வைத்து மறுபேச்சுகளை உருவாக்கிடும் விமர்சனக் கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.