கிறிஸ்து என்கிற பிரச்சனையை இன்றையத் தேவைக்குத் தக்கபடிச் சித்தரித்திருப்பவர்களிலே இந்நூலாசிரியரை முதல்வராகச் சொல்லவேண்டும். குருட்டு நம்பிக்கைக்கும் நாஸ்திகத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தை அதி அற்புதமாக கலை உணர்ச்சியுடன் சித்தரிக்கிறார் ஆசிரியர். உண்மை உலகுக்கும், நம்பிக்கை சிருஷ்டிக்கக்கூடிய உலகத்துக்கும் இடையில் உள்ள கயிற்றில் வெகு லாகவமாக நடந்து வித்தைகள் பல புரிந்திருக்கிறார் பேர் லாகர் குவிஸ்டு.
- ஆண்ட்ரே ழீடு
பல இடங்களில் நின்றுநின்று சிந்தித்துப் படிக்க வேண்டிய நாவல் இது. பக்கங்கள் அதிகமில்லாவிட்டாலும், வைத்துப் போற்றி நிதானமாகப் படித்து அனுபவிக்க வேண்டிய நாவல். ஒருதரம் லாகர் குவிஷ்டின் பாரபாஸை அறிந்துகொண்டவர்கள் அவனை மறக்கவே முடியாது என்பது நிச்சயம்.
- க.நா. சுப்ரமண்யம்
Be the first to rate this book.