எனக்கு இலக்கியம் குறித்த அரசியல் பார்வை இருந்தாலும் எழுத்தை. கலைத்தன்மையும் அழகியல் பொலிவும் கொண்டதாகத்தான் பார்க்கிறேன். முழக்கங்கள் மட்டுமே எழுத்தாகா. அரசியலும் அழகியலும் நெருக்கம் பூண்டு உருவாவதே தேர்ந்த படைப்பு என்பதென் நம்பிக்கை.
இலக்கிய வறட்சியுடைய எங்கள் வேலூர் மாவட்டத்தின் மனிதர்களையும், அவர்தம் மொழியையும் ஒரு சிறு அளவிலேனும் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.
-அழகிய பெரியவன்.
Be the first to rate this book.