மக்கள் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகச் சென்னையில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும். அடித்தள விடுதலையிலும் பௌத்த மறுமலர்ச்சியிலும் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாடு பௌத்த சங்கம், சென்னைப் பல்கலைக்கழகம் திரிபிடகத் தமிழ் நிறுவனம் பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற, ஆற்றல் மிகு இளைஞர் பெ விஜயகுமார். "திரிக்குறன் உரை விளக்கம்' 'பன்முகப் பார்வையில் பண்டித அயோத்தி தாசர்' ஆகிய இரு நூல்களை கொடுத்துள்ளார்.
பெண்கள் பொருளாதார நிலையில் மேம்பட வேண்டும் என்பதும் அதாவது பொருளாதாரச் சுதந்திரம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதும் பெண்ணியக் கொள்கையின் வலுவான கருத்து பொருளாதார உற்பத்தியில் பெண்கள் நேரடி பங்கு கொண்டு உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பது மார்க்சியக் கொள்கையும் கூட அயோத்திதாசரும் தமது கட்டுரைகளில் பெண்கள் கல்வி கற்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றிப் பே நேரும்போதெல்லாம் அவர்களின் பொருளாதார உரிமையின் அவசியத்தைக் குறித்தும் பேசுவது குறிப்பிடத்தக்கதாகும்.
-முனைவர் ப. பத்மினி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் இந்திய சமூக அரசியல் மாற்றங்களின் ஊடாக பௌத்தத்தை, விடுதலைச் சிந்தனையைப் பண்டித அயோத்திதாசர் எடுத்துரைத்தார். செயல்பட்டார். பெண் விடுதலை என்பதும் சாதி ஒழிப்பு என்பதும் சமூகப் பொருளாதார விடுதலை என்பதும் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று உணர்ந்து, மிக ஆழமான புத்தரின் சிந்தனை பார்வையுடனும் நவீன ஐரோப்பிய அறிவியல் அணுகுமுறைகளுடனும் பெண்களின் விடுதலைக்கான உயரிய கட்டமைப்புகளை தனது கருத்துக்களினால் எழுதிக் காட்டினார்.
-பேராசிரியர் க. ஜெயபாலன்
Be the first to rate this book.