தமிழ் உரைநடைக் கடிதங்களுக்கு வித்திட்டவர் அருட்பிரகாச வள்ளல் பெருமான். அவர் 1860-களிலேயே தனது சீடர்களுக்கும் புரவலர்களுக்கும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் பண்டிதர் அயோத்திதாசர்தான் அதிக அளவு கடிதப் போக்குவரத்தைக் கொண்டிருந்திருக்கின்றார் என்பது நன்கு புலப்படுகின்றது. கடிதப் போக்குவரத்துகள் எண்ணற்ற செய்திகளையும் கருத்துக்களையும் பரிமாறுகின்றன.
-பிக்கு போதிபால
வெறுமனே தகவல் என்ற அடிப் படையில் மட்டுமின்றி தத்துவங்கள். இலக்கியங்கள். சமய உண்மைகள். அரசியல் பிரச்சினைகள் என்று பல்வேறு பொருண்மைகள் இக்கடிதங்களில் அலசி ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருந்த அறிவு வேட்கைகளின் முக்கிய பதிவாக இக்கடிதங்கள் உள்ளன.
-க. ஜெயபாலன்
Be the first to rate this book.