ஆட்டிசம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு இன்றும் பலருக்கும் பதில் தெரியாது. உண்மையில் ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல. அது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு மாறுபாடு. அந்த மாறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்தால், ஆட்டிசம் நிலையில் இருப்பவர்களின் உலகம் நமக்கு நெருக்கமாகும்.
ஆட்டிசத்தைப் பற்றி உரையாடுவதற்குப் பல துறைகளைத் தொட வேண்டியது அவசியம். அந்த வகையில் அறிவியல், சமூகநிலை மற்றும் மனித உணர்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்தப் புத்தகத்தில் மிக எளிமையான முறையில் உரையாடுகிறார் சந்திரசேகரன் கிருஷ்ணன்.
ஆட்டிசம் நிலையில் இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான பரிவோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல், நம் அனைவருக்கும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
Be the first to rate this book.