நவீனமயமாக்கலில், வாழ்வின் சிக்கல்கள் வேறோர் உருமாற்றமாக – சென்னை மாநகரின் பேருந்து நிலையத்திலும், நடைபாதையிலும் தம் வாழ்வின் இருப்பைத் தாமே ஏற்படுத்திக்கொண்ட சூழலும், அவலமும் நிறைந்த மாந்தர்களின் இன்றைய நிலையைப் பதிவுசெய்த களம் இந்நாவல்.
உறவுகளாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்களின் அவமதிப்புகள், துயரங்கள், கண்ணீர், வலிகள் என ஆற்றாமையை வரிகளாகச் சொல்லும் இப்பிரதியில், போதை, பாலியல், வறுமை – போதாமை, இல்லாமை இவற்றால் ஏற்றப்பட்ட பெருஞ்சுமைகளைச் சுமக்கும் பாத்திரங்கள் தம் இருப்பின் துயரைப் போக்கவும், எதிர்கொள்ளவும் – நவீன மாற்றங்களினால் ஏதும் நிகழவில்லை என்பதும், பல இழைகளாக இந்நாவலில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
Be the first to rate this book.