தொல்காப்பியத்திற்குப் பிந்தைய இந்திய அறிவாய்வியல் மற்றும் மீவியற்பியல் பற்றிய பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிற திருக்குறளில் எங்கேயும் தமிழ் என்றோ கடவுள் என்றோ வரவில்லை அதனால்தால் இதை உலகப்பொதுமறை எனப் போற்றுகின்றனர். இரண்டே வரிகளில் வாழ்வின் அனைத்து தத்துவங்களையும், நெறிமுறைகளையும் உள்ளடக்கியதால், இது தமிழின் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித வாழ்வினை அறம் பொருள் இன்பம் என மூன்றாகப்பிரித்து உலகத்துக்கே இலக்கியத்தின் வழியாக சொள்ள முதல் நூலும் இதுதான். அதனால்தான் உலகமே இதை 80க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிப்பெயர்ப்புச் செய்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. திருக்குறளுக்கு இதுவரை பலநூறுபேர் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். அத்தகையச் சிறப்புகள் கொண்ட குறள் வெண்பாவில் எழுதியும் கூடவே விளக்கவுரையும் தானே எழுதியும் ஒரு புது முயற்சியாக முதல் முயற்சியாக கொண்டு வந்திருப்பதே 'அசைக்கும் அசைகள்'
~ஜின்னா அஸ்மி
Be the first to rate this book.