இராமலிங்க அடிகளார் தமது சொல்மூலம் உலகினுக்கு உரைத்துள்ள உண்மைகளை உலகினுக்கு எடுத்துரைத்து அவை காட்டும் வழி செல்லும்படி மக்களை நடாத்துவதை விட அவருக்கு பக்தர்கள்' செய்யக் கூடிய, செய்யவேண்டிய நன்றி ெேவறான்றுமில்லை...
ஜாதியும் போலிச் சமயமும் நால்வருணமும் அதன் ஆச்சார அனுஷ்டானங்களும், சாத்திரமும், வேதமும், ஆகமும், அடிகள் எவை எவை தவிர்மின் என்று எடுத்துரைத்தாரோ அவைகள் எல்லாம் விழா கொண்டாடுபவரை நோக்கி. சிரித்துவிட்டு.... இன்று அவர்கள் அருட்பா படிப்பர். நாளை முதல் எமதடி பணிவர், இன்று இராமலிங்கரின் பக்தர்களாயினர் நாளைமுதல் எமது அடிமைகள்" என்றுரைத்து இடிக்கும்!
அந்தோ! அந்தோ! எத்தனை எத்தனை நன்னெறிகள் இந்நாட்டிலே நாவாரப் பேசிப் பேசியே மங்கி மடித்தன! எத்துணை பெரியார்கள். அடியார்கள் இங்கு பூஜிக்கப்பட்டே கொல்லப்பட்டனர்! எந்தெந்த அருள் மொழிகள் புகழப்பட்டு மறைக்கப்பட்டன என். பிறந்தனர் இந்நாட்டில்! ஏன்!
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.