விலங்குகள் கூட தமது உணவுக்காகவும், பாலியல் துணைக்காகவும் உழைத்துதான் ஆகவேண்டும். ‘மனிதனின் உழைப்பும் இப்படித்தானா’ என்றொரு கேள்வியை எழுப்பி, நம் மனதை உலுக்குகிறது இந்நூல்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவு, இனப்பெருக்கத்துக்கு அப்பாற்பட்டு வேறு சிலவற்றுக்கு மனிதன் தன் உழைப்பைக் கொடுத்ததை அதிசயமான தகவல்கள் தந்து வியக்க வைக்கும் இந்நூல், ‘மனித உழைப்பின் மகத்துவம் குறைந்தால் என்ன ஆகும்?’ என்பதை சுவைபட உரைக்கிறது.
மேலும், மனிதர்களின் உழைப்பை அக்காலம் முதல் இக்காலம் வரையில் தர்க்க பூர்வமாகவும் பேசும் இந்நூல் ‘ஏ.ஐ.,’ என்ற செயற்கைத் தொழில்நுட்பம் மனித குலத்திற்கு செய்யப்போவது நன்மையா, தீமையா என, தீர்ப்பு சொல்லாமல், ஆருடம் கணிக்காமல், அக்கறையுடன் நம் மனதோடு உரையாடுகிறது
- பிச்சைக்காரன்
Be the first to rate this book.