எதையும் எதிர்ப்பவர் எதையும் மறுப்பவர், எதையும் தையாண்டி செய்பவர் என்ற பெயர் ஷாவுக்கு ஓட்டிக் கொண்டு விட்டது. உண்மையில் இவ்வெண்ணத்தை வலியுறுத்தி, மக்களிடையே பரப்பியவர் அவரே என்னலாம். எக்கொள்கையிலும் சார்பாளர், மறுப்போர் ஆகிய இருதிறத்தினரிடமிருந்தும் தம்மைப் பிரித்து, தம் தனித் தன்மையையும், விருப்பு வெறுப்பற்ற அறிவுச் சார்பான நடுநிலையையும் வற்புறுத்தவே அவர் இம் முறையைக் கையாண்டார். இது வெற்றிபெறவே, அவர் இதனை ஒரு புதுக் கலையாக்கிவிட்டார். முனைப்பான இறுமாப்பு நடையும் மனித இனத்தையே எள்ளி நகையாடுவது போன்ற பெருநகையும் அவர் தாமே விரும்பி மேற்கொண்ட இத்தகைய பண்புகளே. இவை உண்மையில் இறுமாப்பல்ல பகை, தன்னல் உணர்ச்சிகள் சார்ந்தவையுமல்ல. அவர் புறத்தோடாகிய அரணைத் துளைத்து, அவர் நட்புரிமை பெற்ற ஒருசிலர் இதனைக் கண்டறிந்துள்ளனர். அவர் எதிர்ப்பு, பகைமை எதிர்ப்பல்ல என்பதை அவர் குறும்புச் சிரிப்பு ஓயாது நினைவூட்டவல்லது.
Be the first to rate this book.