தமிழர் மறுமலர்ச்சியின் மூலவர் வள்ளலார் இராமலிங்க அடிகள் தனது உயிரிரக்கம் என்ற மையக் கோட்பாட்டால். தமிழர் மெய்யியலிலேயே ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியவர். இதுவரை, வள்ளலார் குறித்து ஆன்மிகத் தளத்தில் பல நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால் வள்ளலாரின் அறிவியல் பார்வை குறித்த நூல்கள் மிக மிகக் குறைவே.
அந்த வகையில் வள்ளலாரின் பன்முனைப்பட்ட அறிவியல் கருதுகோள்களை அவருக்குப் பின் மேற் குலகத்தில் வெளியிடப்பட்ட புதிய அறிவியல் கோட்பாடுகளோடு பொருத்திக்காட்டும் முனைவர் வே. சுப்ரமணிய சிவா அவர்களின் கட்டுரைகள் இளையோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை ஆகும்.
Be the first to rate this book.