தோழர் சிங்காரவேலர் ஐரோப்பிய புத்தொளி மரபை உள்வாங்கித் தமிழ் மண்ணில் செயல்பட்டவர். இங்கிருந்த பகுத்தறிவுக்கு முரணான அனைத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தவர். இவ்வகையில் அவர் பெரியாரோடு இணக்கமான உறவு கொண்டு செயல்பட்டார். பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தில் செயல்பட்டார். அவ்வியக்கத்தின் பொருளாதாரக் கோட்பாடுகள் குறித்து இறுதிவரை விமர்சனம் செய்தார். இவ்வகையில் கம்யூனிச கோட்பாடுகளை முன்னெடுக்கும் மார்க்சியத் தத்துவம் மீது அவர் கொண்டிருந்த பிணைப்பு, அவர் சுயமரியாதை இயக்கத்தில் செயல்படுவதற்குச் சிக்கலாக இல்லை.
-பேராசிரியர் வீ. அரசு
ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சித்தாந்தத்தைப் பற்றியோ விளக்கும் போது, அந்த வார்த்தைகள் எப்படித் தோன்றியது என்பதிலிருந்து, அந்தச் சிந்தாந்தம் தோன்றிய வரலாற்றுப் பின்னணிப் பற்றியும், அதனுடைய சாதக, பாதக அம்சங்களைப் பற்றியும். அதைச் சமதர்மிகள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எளிய நடையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் புரியும் வண்ணம் அளித்ததில் அவருக்கு நிகர் அவரேயாவார்.
-தோழர் மைதிலி சிவராமன்
சிங்காரவேலர் சமூகச் சீர்திருத்த சிந்தனையை உள்வாங்கியவர். மார்க்சியப் புலமையும். அதில் அழுத்தமான நம்பிக்கையும் கொண்டவர் என்பதுடன், அதை நடைமுறைப்படுத்தும் அமைப்பையும் இயக்கத்தையும் உருவாக்குவதிலும் ஈடுபட்டவர். இவரது எழுத்துக்களையும், வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கும் போது அரசியல், பொருளாதாரம் சமூகச் சீர்திருத்தம் என்ற மூன்று தளங்களிலும் அவர் செயல்பட்டது புலனாகிறது.
-பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
Be the first to rate this book.