இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கும் இது நூற்றாண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 1925 டிசம்பர் 25ஆம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்திருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்றுமை இது.
ஆர்.நல்லகண்ணுவின் பெருமை மிகுந்த வாழ்க்கைத் தடத்தை, ‘அறவாழ்வின் அடையாளம்’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.
நல்லகண்ணுவின் இளம் வயதுப் போராட்டங்களையும், அவர் அனுபவித்த சிறைக் கொடுமைகளையும் அறியும் அனைவருக்கும் அவர் மீது பெரும் ஈர்ப்பு உருவாகும் என்பது நிச்சயம். குறிப்பாக, அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றிய வரலாற்றைப் படிக்கும் இளம் தலைமுறையினர், மக்களுக்காகத் தொண்டு செய்ய இப்படியும் ஒரு உறுதிமிக்க தலைவர் இருக்க முடியுமா என்று வியப்பில் ஆழ்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.
Be the first to rate this book.