அரபு கவிஞர்களுக்கு கவிதை என்பது ஆயுதம், கண்ணீர், மௌனம், காதல், எதிர்ப்பு, ஜெபம் எல்லாமே ஒரே நேரத்தில். அவர்கள் பாலஸ்தீனத்தைப் பற்றிப் பாடும்போது அதுவொரு கவிதையல்ல; அது ஒரு புரட்சி அறிக்கை. காதலைப் பற்றிப் பாடும்போது அது வெறும் காதல் அல்ல; அது உயிர்வாழ்வதற்கான ஒரு வழி.
அரபு கவிதையின் மற்றொரு சிறப்பு, அதன் இசை. அரபு மொழியின் ஒலி அமைப்பு, அதன் பலவிதமான எழுத்துக்களின் உச்சரிப்பு, குர்ஆன் ஓதலின் சந்த நயம் இவை எல்லாமே கவிதையை ஒரு இசைக்கருவியாக மாற்றிவிடுகின்றன. அதனால் தான் அரபு கவிதைகளை உரக்க ஓதும்போது, கேட்பவர்களின் உடலில் ஒரு திகைப்பு, ஒரு நடுக்கம் ஏற்படுகிறது.
Be the first to rate this book.