சிறைபோல மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய நிலப்பரப்பிற்குள் உழலும்படியாய் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் பிரபஞ்சம் முழுவதையும் காணும் அகக்கண்ணை தமது மூதாதையர் வழியே அடைகின்றனர். சமத்துவம் என்கிற மனிதகுலத்தின் ஆக நவீனக் கருத்தாக்கத்தை அவர்கள் தலைமுறை தலைமுறையாக இடையறாது பரப்பிவருகிறார்கள். அதற்காக உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தம்மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளின் தழும்புகளை ஞாபகங்களில் ஏந்தியுள்ள அவர்கள், அந்தந்தக் காலத்தின் போராளிகளாக அவரவர் களத்தில் வேலை செய்கிறார்கள். தம்மை ஒதுக்கி வைத்ததால் பின்னமாகிக் கிடக்கும் இச்சமூகத்தை முழுமைப்படுத்த இயன்ற வழியிலெல்லாம் இயங்குகிறார்கள், அதியன் ஆதிரை கவிதையில் இயங்குகிறார்.
Be the first to rate this book.