ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு கதை பொதிந்திருக்கிறது. கதை சொல்லும் நடை கூடவே வருகிறது. அதனாலேயே, 'கட்டுரை இலக்கியம்' என்ற அடையாளத்தைப் பெறுகின்றன இந்த எழுத்தாக்கங்கள். அருமையான சிறுகதைகளைப் படைத்தளிப்பவராக, இலக்கிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக, பல்வேறு கருப்பொருள்களில் உரையாளராக என்று தெளிவாகப் பதிந்துவிட்ட தீபா நாகராணியின் தடங்கள் மென்மேலும் அழுத்தமும் ஆழமும் பெறும் என்பதில் ஐயமில்லை.
-அ. குமரேசன்
ஜெ. தீபா நாகராணி [18.12.1977]
மதுரையைச் சேர்ந்தவர். மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் படிக்கும்போது நாட்டு நலப்பணித் திட்டத்தில் (NSS) சிறந்த மாணவத் தொண்டருக்கான விருதை மாநில அளவில் பெற்றவர் (1998). அதே காலகட்டத்திலேயே சன், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் விவாத அரங்குகளில் பங்கேற்றவர். இவர் M.A. M.Phil.. (வரலாறு) பட்டம் பெற்றிருக்கிறார். குங்குமம் தோழி இதழில் ஓராண்டுக் காலம் (2014-15) 'ஊஞ்சல்' என்ற தலைப்பில் எழுதிய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. பாவையர் மலர் இதழில் 'பயணம்' என்ற தலைப்பில் ஒரு வருடம் எழுதிய தொடர். சுற்றுலாவின் முக்கியத்துவத்தைப் பேசியது. ஜன்னல், கல்கி, ஃபெமினா, அந்திமழை, அவள் விகடன். செம்மலர், ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இலக்கியக் கூட்டங்களில் நூல் விமர்சனம், பள்ளி, கல்லூரிகளில் உரையாற்றல், சிறுகதைக்கான பயிற்சிப் பட்டறை. பழங்குடியினப் பெண்களிடையே விழிப்புணர்வு ஊட்டும் முகாம்களில் கலந்து கொள்ளல் என நீள்கிறது இவரின் பயணம் தொடர்ந்து மாணவர்கள், மகளிர் என முக்கியத்துவம் கொடுத்து உரையாற்றி வருவது இவரின் சிறப்பு.
Be the first to rate this book.