இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை, 'சுயநலம்' மேலோங்கிவிட்டதால் சென்று விட்டார்கள். அவர்கள் எப்படி நீடிக்க முடியும்?' என்பார். மீண்டும் அவர்கள் வருகிறார்களே! அவர்களை எப்படி எதிர்கொள்வது? என்று கேட்டால், இயன்றவரை, அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
அடுக்களையில், பூனை மேல் ஒரு கண்ணை வைப்பது போல், திரும்பியவர்களைக் கவனிக்கத்தான் வேண்டும். தலைவர்கள் இதை அறிவர். நமக்குத் தனிமனிதன் முக்கியமல்ல. இயக்கம்தான் முக்கியம் என்பார். இயக்கத்தில் நின்றவர்களைப் பற்றியும் பேசி இருக்கிறோம். இயக்கத்தை விட்டுச் சென்றவர்களைப் பற்றியும் பேசியிருக்கிறோம். ஆனால், யாரையும் அப்பா, குறை சொல்லிப் பேசியது கிடையாது. அவரவர் செய்த சேவைகளைப் பற்றிப் பெருமையாகவே பேசுவார்.
Be the first to rate this book.