நல்ல இலக்கியம் எந்தக் காலத்திலும் உயிர்த்துடிப்புடன் இயங்க வல்லது என்பதற்கு புதுமைப் பித்தனின் நாரத இராமயணம்" ஒரு நல்ல சான்றாகும். அக்குறுநாவல் வெளிவந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வி சோம. அழகுவின் 'அனுமன் பாரதம்' அதன் தொடர்ச்சியாக வெளிவருகிறது. தனக்கே உரிய சரளமான மொழி நடையில் இக்குறுநாவலை ஆக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர். போன்மை (Parody) இலக்கியங்களில் இன்றியமையாத ஒரு கூறு காலம் என்பதாகும். போன்மை இலக்கியம் தமிழில் வளராத ஒரு துறையாகும். அந்த வகையில் இந்த நூலாசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. இம்முயற்சி பல படிகளைக் காணவேண்டும் என்பது எனது ஆசை. ஆசை மெய்ப்பட அவரை வாழ்த்துகிறேன்.
- பேரா.தொ.பரமசிவன்
அனுமன் பாரதம் என்னும் political satire புலியைப் பார்த்து பூனை போட்டுக்கொண்ட சூடாக எடுத்துக்கொள்ளலாம். இது போக, உறவுகளின் தெரிவில் கடுமையான சல்லடை தேவை என்று உணர்ந்ததில் எழுதியவை, சமூகத்தின் பொதுபுத்தியில் விளைந்த கட்டுப்பட்டித்தனங்களை உடைத்துச் செல்ல வேண்டி கோபத்தில் எழுதியவை, சில விஷயங்களில் பச்சாதாப உணர்வு மேலெழுவதோடு நில்லாமல் என்னை முழுமையாகத் தின்றுவிட்ட பொழுதுகளில் உருவானவை இவையே இன்னபிற பொதுவான கட்டுரைகள்.
- சோம். அழகு
தமிழில் பகடி இலக்கியம் மிகவும் குறைவு. சோம.அழகு அதனை நிறைவு செய்திருப்பது அழகுதான்.
- காவ்யா சண்முக சுந்தரம்
Be the first to rate this book.