விடுதலைக்குப் பின்னான புதிய இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில், மக்களின் அன்பை முழுமையாகப் பெற்றவர் பேரறிஞர் அண்ணா. “இப்படியும் ஒரு தலைவன் இருக்க முடியுமா?' என வியக்கும் வண்ணம் எளிமை, பொதுவாழ்வில் தூய்மை என்று வாழ்ந்து காட்டியவர். தனது எழுத்தால், பேச்சால், மனிதத்தால், தமிழர்களுக்கு அடையாளம் தந்தவர். கழகத்தைக் குடும்பமாய், ஒரு பாச அண்ணனாய் வழி நடத்தியவர். இணை ஆட்சிமொழியாக ஆங்கிலம் தொடர சமர் புரிந்து இந்தியா ஆங்கிலத்தால் தொட்டிருக்கிற உயரங்களுக்கு அடித்தளமிட்டவர்.
Be the first to rate this book.