இன்றைய உலகில் ஆன்மீகம் என்று சொன்னாலே பலர் அதைக் கற்பனைகள், அமானுஷ்யங்கள், சடங்குகள், தீர்க்கதரிசனங்கள், அதிசய சக்திகள் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஓர் எளிய உண்மை யாரும் சொல்ல மறுக்கிறார்கள்:
ஆன்மீகம் என்பது நம் மனதின் இயல்பை அறிதல்.
ஆன்மீகம் என்பது நம் உணர்வுகளைப் பார்க்கும் திறன்.
ஆன்மீகம் என்பது சிந்தனைகளை நிறுத்துவது அல்ல, அவற்றைப் புரிதல்.
ஆன்மீகம் என்பது ஓட்டத்தில் செல்லும் வாழ்க்கையைத் திடீரென நிறுத்தி, "நான் எங்கே ஓடுகிறேன்?" என்று கேட்டுத் தொழுது நிற்பது.
இந்த புத்தகம் மதத்துக்கு எதிரானது இல்லை. ஆனால் மதத்தைத் தாண்டிச் செல்லும் முயற்சி இது. ஏனெனில் உண்மை தேடுபவனின் உள்ளம் சுவர்களைக் கட்டிக்கொண்டு உண்மையைக் காண முடியாது. அவன் தன்னுள் உள்ள எல்லாச் சுவர்களையும் மெதுவாகத் தகர்த்துத் தள்ள வேண்டும்.
Be the first to rate this book.