வாழ்க்கை என்பது நாம் திட்டமிட்டபடி அமைவதல்ல. அது எதிர்பாராத திருப்பங்களும், விவரிக்க முடியாத தருணங்களும் நிறைந்தது என்பதை இக்கதைகள் அழுத்தமாகப் பேசுகின்றன. ஒவ்வொரு கதையிலும் வேறுபட்ட - தனித்த - ஓர் அம்சம் இருக்கிறது. வரலாறு, சமகாலம், அன்றாடம், தொன்மம், தத்துவம், இயற்கை என பலதரப்பட்ட களங்களிலிருந்து மனிதனை நோக்கி (சற்றே திகைப்புடன்) வர முற்படும் கதைகள் இவை. சாதாரண மனிதர்களின் அசாதாரணமான மனவோட்டங்களையும், வாழ்வின் நிலையாமையையும் (அநிச்சயத்தையும்) ஒரு தேர்ந்த கலைஞனின் பார்வையோடு இப்புத்தகம் பதிவு செய்கிறது. வாசகர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் எதார்த்தமான கதைகளின் தொகுப்பு இது.
Be the first to rate this book.