அந்தக் காலப் பக்கங்கள்' என்னும் நூல் வரிசையின் ஆறாவது பாகம். நகைச்சுவை, சுவாரசியம், விநோதம், ஆச்சரியம், விமர்சனம், நம்ப முடியாத சம்பவங்கள் என அந்தக் காலத்துச் சமூக வாழ்வையும் கலை உலக நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் இந்தப் புத்தகம் சுவையாகப் பதிவு செய்கிறது. இந்தப் பதிவுகளின் மூலம், சில விஷயங்கள் கால மாற்றத்தையும் தாண்டி நீடிப்பதைக் காணமுடியும். அந்தக் காலப் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் அபாரம். அந்தக் காலகட்டத்தில் வெளியான சுவாரசியமான பத்திரிகைச் செய்திகளையும் விளம்பரங்களையும் அதே உருவில் இணைத்து, இந்தப் புத்தகத்தைப் பாதுகாக்கவேண்டிய ஓர் அரிய ஆவணமாக உருவாக்கியுள்ளார் அரவிந்த் சுவாமிநாதன்.
Be the first to rate this book.