அன்புள்ள  அம்மா
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

அன்புள்ள அம்மா

114 ₹120 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: இரா. பாலகிருஷ்ணன்
Publisher: பரிசல்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789348942159
Published on: 2025
Book Format: Paperback
Category: கவிதை

Description

"நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்" என்று கூறும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் 1958இல் பிறந்தவர், இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முறையாக தமிழிலேயே எழுதி 1984இல் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்ற ஒரே தமிழ் இலக்கிய மாணவர்.

இந்தியவியல், திராவிடவியல் ஆய்வாளரான இவர், 'சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஒடிசா மாநில அரசில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராக இருமுறை பணியாற்றியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-ல் ஓய்வுபெற்றார். ஓய்விற்குப் பின்னர் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள் பணியாற்றி 2024இல் தமிழ்நாடு திரும்பியுள்ளார்.

'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்', 'Journey of a Civilization: Indus to Vaigai', 'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை'. ஆகியவை இவரது ஆய்வு நூல்கள். 'அன்புள்ள அம்மா', 'சிறகுக்குள் வானம்', 'நாட்டுக்குறள்', 'பன்மாயக் கள்வன்', 'இரண்டாம் சுற்று'. 'குன்றென நிமிர்ந்து நில்', 'கடவுள் ஆயினும் ஆக', 'அணிநடை எருமை', 'ஓர் ஏர் உழவன்', 'தமிழ் நெடுஞ்சாலை', 'இப்படி ஒரு தீயா!' ஆகியவை இவரின் கவிதை மற்றும் கட்டுரை நூல்கள்.

இவர் தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்படுகிறார்.

சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய முதல் நூல், ‘அன்புள்ள அம்மா’ என்ற கவிதை  நூலாகும்.

About the Author

இரா. பாலகிருஷ்ணன்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையத் தலைவரான, சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் பண்டைய தமிழ்நாட்டிற்கும் இடையிலான தொடர்பு குறித்து இவர் எழுதிய Joumey of a Civilization: Indus to Vaiga (2019) என்கிற நூல் சிந்துவெளி ஆய்வுலகில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. அதன் தமிழ்ப் பதிப்பான ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை" 2023)நூல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்துடன் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' (2016), 'கடவுள் ஆயினும் ஆன (2022), ஃஅணி நடை எருமை (2022), 'ஓர் ஏர் உழவன்" (2022) உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். தனது வாழ்கை அனுபவங்களை இரண்டாம் சுற்று (2018). 'குன்றென நிமிர்ந்து நில்' (2018), 'தமிழ் நெடுஞ்சாலை" (2022) ஆகிய நூல்களின் வழியே பகிர்ந்துள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தின் பன்மியத்தை ஆழமாக வலியுறுத்தும் இவர், 'இந்தியா ஒரு மழைக்காடு' என்ற கருத்தாக்கத்தைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். இதனை ஒரு பண்பாட்டு அரசியல் செயல்பாடாகச் செய்து வருகிறார். தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp