கவிஞரின் கவிதைகளில் இடம்பெற்றுள்ள சொற்கள், மனித நேயத்தையும் தாண்டிய உயிர் நேயத்தை வெளிப்படுத்துவது சிறப்பு. ஒரு படைப்பாளிக்கு தனது படைப்பை உருவாக்குவதில், கற்பனைத்திறன், ரசனை, இவற்றைத் தாண்டி சமூகப் பொறுப்புணர்வும் முக்கியமெனக் கருதுவேன். அந்த பொறுப்புணர்வைச் சுமந்த கவிதைகளால் இத்தொகுப்பு நிறைந்திருப்பதால், வாசிக்கும்போதே மனதுக்கு நெருக்கமாக உணர முடிகிறது.
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
எழுத்தாளர், பத்திரிகையாளர்
**
சமகால இறுக்கங்களில் இருந்து விடுபட வழியெதிர் நோக்கும் மனதிற்கு பட்சியின் இறகுகளே இறுதி சரண். அதனைப் பற்றிப் பறக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் தப்புவித்துக் கொள்ளலாம் என்பதை உணர்த்துகிறது பின்வரும் கவிஞரின் கவிதை.
"ஒரு பட்சி முழுமையாக
சிறகு விரித்து பறத்தலுணர்கையில்...
அந்தரத்தில் தொங்கும்
இவ்வுலகமும் உடன் இணைந்துகொள்கிறது!"
- கவிஞர்.எஸ்தர் ராணி
சென்னை.
Be the first to rate this book.