கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதை’யாக இருக்கிறது இன்றைய மனிதனின் வாழ்க்கை. சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்கான இயந்திரங்களை வாங்க வேண்டி மனிதன் தானே இயந்திரமாகி ஓய்வு ஒழிச்சலின்றி ஓடுகிறான். அதனால் அவன் மன நிம்மதி தொலைந்து போகிறது. உடல் ஆரோக்கியமும் குறைந்து விடுகிறது. இன்றைய மனிதனுக்கு வாழ்க்கை வசதிகளும் அவசியம். அதை அனுபவிக்கக் கூடவே மன அமைதியும், ஆரோக்கியமும் கட்டாயம் அவனுக்கு வேண்டும். அதற்குள்ள ஒரே வழி யோக, தியானப் பயிற்சிகளை முறைப்படி செய்வதுதான். அந்தப் பயிற்சிகளைச் செய்வது எப்படி? என்பது பற்றி எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.