சொற்களால் காணாமற் போகிற ஒருவன் தனக்குள் கண்டடைகிற ஒருவனை சொற்கள் கொண்டு கட்டமைக்க ஆரம்பிக்கிறான். அவனை எழுத்தாளன் என்கிறது சமூகம். இப்படி ஆக விரும்பிய ஒருவனின் சொற்கள்தான் இப்பன்னிரெண்டு சிறுகதைகள்.
-ஆனந்த் குமரேசன்
திரை எழுத்தாளர் - இயக்குநர்
இளஞ்சேரன் ராஜப்பா, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளங்கலை காட்சித் தொடர்பியல் (BSc.Viscom) படித்த இவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகவும் திரைக்கதை&வசன எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். பகுதி நேரமாக அரசு சாரா அமைப்பின் (NGO] கீழ், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு திரைப்பட உருவாக்கம் [Film Making] பற்றிய வகுப்புகள் நடத்தி வருகிறார். 'அம்மாவின் முதல் மிடறு இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
Be the first to rate this book.