ஆராயி முதல் அம்மை அழைப்பு வரை, எழுத்துலகில் தன்னை அழகாகச் செதுக்கிக்கொண்டு வருகிறார் விஜி முருக நாதன். பாசாங்கு இல்லாத அக்மார்க் யதார்த்த நடையிலான எழுத்து, கடுகுக்குள் கடல் இருப்பதுபோல, இவரது சிறுகதைக்குள் நாவல் இருக்கிறது. தேவையில்லாத வர்ணனைகளைத் துண்டித்து நேரடியாகக் கதைக்குள் வரும் பாங்கு, இவரை எழுத் துலகில் இன்னும் பல உயரங்களைத் தொட வைக்கும்.
– எழுத்தாளர் தேவிபாலா
கதைச் சூழலுக்கு வாசகரை அழைத்துச் செல்வதோடு, கதாப்பாத்திரத்தின் மனநிலை யோடு ஒன்றச் செய்வதும் மிகச் சிறப்பாகக் கைவருகிறது விஜி முருகநாதனுக்கு. கூடுதல் பலம் வட்டார வழக்கு, அது கதைக்கு ஒரு அணிகலனாக, அலங்காரமாக அமைவதோடு, துல்லியம் சேர்க்கிறது. உரையாடல்களில் நேர்த்தி, வர்ணனைகளில் வசீகரம், அழுத்தமாக மனத்தில் உட்காரும் உணர்வுகள். ஒரு சிறந்த சிறுகதைக்கு வேறென்ன லட்சணம் வேண்டும்?
– எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்
எல்லோரையும் அவரவர் இளமைக்கு எடுத்துச் செல்கிற கதைகள், தளர்வில்லாத நடை, பாரம்பரிய நம்பிக்கைகளையும் சமகால மாற்றங்களையும் காட்சி உரையாடல், பெயர்களில் புலப்படுத்திப் போவது செறிவைச் சேர்க்கிறது. சொல்லப்படாத காதல்களை எழுத்தில் கொண்டுவருவது எளிதல்ல. விஜி முருகநாதனுக்கு அது வசப்பட்டுள்ளது.
– எழுத்தாளர், ஊடகவியலாளர் மாலன்
Be the first to rate this book.