களப்பிரன் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘அம்பேத்கருடன் டீ சாப்பிடுவோம்’ என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது. களப்பிரன் தேர்ந்த எழுத்தாளர். ஆற்றல் மிக்கப் பேச்சாளர். பன்முகத் திறன் கொண்ட களச் செயல்பாட்டாளர். இந்நூலில் உள்ள கட்டுரைகள் வெவ்வேறு பொருளில் எழுதப்பட்டிருந்தாலும் மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயக மாண்புகள் போன்றவை இதன் அடிநாதமாக உள்ளது. அம்பேத்கருடன் சேர்ந்து சாப்பிடும் டீ புராணக் கதைகளின் அமிழ்தமாக இருக்காது.சமத்துவ சுவை நிறைந்ததாக இருக்கும்.
Be the first to rate this book.