வாழ்க்கைக்குரிய பெரிய போராட்டங்களில் யுத்தமும் ஒன்று! யுத்தத்திற்குரிய பொதுவான காரணங்கள் பல இருப்பினும், மன்னர்களைப் பொறுத்தமட்டில் ஒரே ஒரு காரணந்தான் உண்டு. பல தேசங்களின் எல்லைகளை அழிக்கும் ஏகாதிபத்திய சாம்ராச்சிய வெறிதான் அது! அவ் வெறி பிடித்தவன் கண்களுக்கு ஒரு உபகண்டமல்ல. உலகமே ஒரு தேசமாகவும் அதற்கு அவன் ஒருவனே சக்கரவர்த்தியாகவும், சர்வாதிகாரியாகவும் இருக்கவேண்டும் என்றே தோன்றும். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான ஏகாதிபத்திய வெறி, கொள்ளைக் கூட்டத் தலைவன் காலம் முதல் காந்தியார் காலம்வரை இந்திய உபகண்டத்தில் நிலவி வந்திருக்கின்றது.
இந்திய உபகண்டத்திலுள்ள பல்வேறு தேசங்களின் மக்கள் தத்தம் இனத்தின் பேராலும் ஆங்காங்கு தழுவியுள்ள மதத்தின் பேராலும், தனித்தனியான கலாச்சாரப் பண்பாட்டின் பேராலும், மொழியின் பேராலும் (உள்ளூரப் புத்துயிர் பெற்றுத் தளிர்த்துக் கொண்டிருக்கின் றமையால்) அவரவர்களும் தனித்தனியான அரசுரிமை கோருகின்றனர். மேலும், தனித்தனியான தேசாபிமானிகளையும், கலாபிமானிகளையும் உற்பத்தி செய்யக்கூடிய விதமாகத் தேசாபிமானங்களும், கலா ஞானங்களும் பண்பாடுகளும், இன உணர்ச்சிகளும் அரசியல் கிளர்ச்சிகளாக உருப்பெற்று வலுக்கின்றன.
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.