சமகால தமிழிலக்கியச் சூழலில் புதுமை பாய்ச்சும் மரபுக் கவிதை எழுதும் ஆற்றல் மிக்கோர் மிகச்சிலரே. அவருள் மிக முக்கியமானவர் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன் ஆவார். அனைத்து வகைப் பாடல்களையும் யாத்தளிக்கும் புலமை கொண்டவர்.
கலைஞர் தொண்ணூறு என்னும் நிகழ்வொன்றினைக் கலைஞர் அவர்களின் தொண்ணூறாவது அகவை தினத்தை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். தமிழின் சமகாலக் கவிஞர்கள் தொண்ணூறு பேர் அதில் பங்கேற்றனர். அந்த அற்புதமான பொழுதில் கலைஞர் முன் படைக்கப்பட்டதுதான், 'அகிலம் போற்றும் கலைஞர் அந்தாதி' என்னும் இந்த நூல்.
நாம் வாழும் காலத்தின் வரலாறாய்த் திகழும் மாபெரும் தலைவனைப் பற்றி, இலக்கிய இன்பத்தோடு வாசிப்பது ஒரு பேரனுபவம். கலைஞர் புகழ் என்றும் நிலைக்கும். நிலைத்த புகழில் இந்நூலும் நிற்கும்.
-முனைவர் தமிழ்மணவாளன்
Be the first to rate this book.