சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சிவனடியார்களாகிய 63 நாயனார்களின் வாழ்க்கைச் சரிதம் அடங்கியுள்ளது. இயற்றப்பட்ட சில ஆண்டுகளில் பெரியபுராணம் சமஸ்கிருதத்துக்குச் சென்றது. வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பேர்கள் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் அவற்றுள் முக்கியமானது, முழுமையானது என்றால் அது அகஸ்திய பக்தவிலாசமே ஆகும்.
அகஸ்திய பக்தவிலாசத்தை மிக அருமையான முறையில் வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்திருக்கிறார் முனைவர் சங்கரநாராயணன். பன்மொழி அறிஞரான இவர், மிகச் சிறப்பான அறிமுக ஆராய்ச்சி உரையையும் வழங்கியிருக்கிறார்.
தமிழின் ஆகச்சிறந்த சமய நூல் ஒன்று வடமொழிக்குச் சென்று பின்னர் மீண்டும் தமிழாக்கம் ஆகிவருவது இதுவே முதல்முறை. பெரியபுராண அறிஞர்கள், சைவ சித்தாந்திகள், சிவபக்தர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் போற்றவேண்டிய நூல் இது.
Be the first to rate this book.