பதிப்புத் துறையின் எதிர்காலத்தைக் கண்டறியுங்கள்:
உலகம் இன்று செயற்கை நுண்ணறிவின் கண்ணசைவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது செயற்கை நுண்ணறிவு தொடாதத் துறை ஒன்றில்லை; அது தொடாமல் இனி ஒரு துறையும் இருக்கப்போவதுமில்லை. செயற்கை நுண்ணறிவின் நம்பமுடியாத வளர்ச்சி அச்சத்தை உருவாக்கியிருப்பது உண்மைதான்; பதிப்புத் துறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தப் பின்னணியில்தான் நதீம் சாதிக் எழுதியிருக்கும் நூல், Shimmer, don't Shake: How Publishing Can Embrace Al,மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.அதன் தமிழாக்கமே 'அச்சம் தவிர்'.
'அச்சம் தவிர்' பதிப்பித்தலின் பரிணாம வளர்ச்சியையும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சியையும் ஆராய்கிறது. பதிப்பாளர்கள், நூலாசிரியர்கள். வாசகர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஏஐ-யால் ஏற்படப்போகும் மாறுதல்களை விரிவாக ஆய்கிறது இந்த நூல். செயற்கை நுண்ணறிவு பதிப்பித்தலில் ஒரு நேர்மறையான சக்தியாக எவ்வாறு இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து வழிகாட்டுகிறது.
Be the first to rate this book.