The Wind Will Carry Us, Taste of Cherry, Through the Olive Trees, முக்கியமான திரைப்படங்களின் வழியே உலகெங்கும் அறியப்பட்ட ஈரானின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கியோரஸ்தமி (22 ஜூன் 1940 - 4 ஜூலை 2016). இவர் ஒரு கவிஞரும் கூட. காட்சிகள், காட்சிகளின் லயங்கள் அது சேர்ந்து உருவாக்கும் அல்லது உணர்த்தும் தத்துவார்த்த அர்த்தத் தளங்கள் என அப்பாஸின் சினிமாவுக்கும் அதன் தொடர்ச்சியாக அவர் எழுதிய கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. தன் சினிமாவில் ஆன்மிக குணநலன் கொண்ட நிரப்பரப்புகளின் காட்சி வழியே மனித வாழ்வை நிகழ்த்திக் காட்டியவர் அப்பாஸ் கியோரஸ்தமி. கவிதைகளில் குறைவான சொற்களின் வழியே தான் வாழும் நிலப்பரப்பின் விஸ்தீரணத்தை, பருவங்கள் இப்புவியில் நிகழ்த்தும் மாறுதல்களை, அதனூடே மனித வாழ்வு கொள்ளும் வீர்யத்தை தன் கவிதைகளில் மறுஉருவாக்கம் செய்தவர். மனிதர்களின் அகவுணர்ச்சி பருவங்களூடாகவும் பருவங்களின் அகப் பிரதிபலிப்புகள் மனிதர்கள் மேலும் கவிழும் கவித்துவக் கனவு என்று அப்பாஸ் கியோரஸ்தமியின் கவிதைகளை உறுதியாகச் சுட்ட முடியும்.
-சரோ லாமா
Be the first to rate this book.