இந்நூல் கையாளவிருப்பது பேருருவம் கொண்ட நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் என்னும் கூட்டு ஆளுமையை, அல்லது ஒரு குட்டிச் சமூகத்தை, சமூகம், பண்பாடு என நாம் சொல்லும் இந்தப் பேரமைப்பின் இன்னொரு வடிவம்தான் இது. அதன் அத்தனை சிக்கல்களையும் ஒரு விற்பனையாளன் கையாள முடியுமா என்ன? இது அந்தப் பேருருவனை அவன் பொருளை வாங்கும் கணத்தில் மட்டும் நிறுத்தி அங்கே அவன் வெளிப்படுவதை மட்டும் கொண்டு வரையறை செய்கிறது. அங்கே அவனைக் கையாள்வதைப் பற்றிப் பேசுகிறது. நம் கூடாரத்திற்குள் வருவது ஒட்டகத்தின் தலை மட்டும்தான் என்றால் கையாளவிருப்பது சற்றே பெரிய ஒரு முயல் வடிவ உயிரை-அவ்வளவுதானே? ஆகவேதான் இந்நூல் கச்சிதமான சிறிய வடிவில் உள்ளது.
-ஜெயமோகன்
Be the first to rate this book.