பங்குச்சந்தையின் பரவலாக்கல் வேகமாக நடந்து வருகிறது. பெரிய அளவில் பணம் சம்பாதிக்க பங்குச்சந்தை அனைவருக்கும் ஒரு சமமான வாய்ப்பைத் தருகிறது. அதுவும் நேர்மையாக, சட்டபூர்வமாக பணம் சம்பாதிக்கும் ஒரு வழி. இனி யாரும் "ஷேர் மார்க்கெட் எனக்குத் தேவையில்லை' என்று விட்டுவிடமுடியாது. ஷேர் மார்க்கெட் என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இது, பங்குச்சந்தை பற்றித் தெரியாதவர்களுக்கும், ஓரளவுக்கு மட்டுமே தெரிந்தவர்களுக்கும் விளக்கமளிக்கும் ஒரு புத்தகம். பங்குச்சந்தையைச் சூதாட்டம் போலக் கருதி, எவ்வித யோசனையும் இன்றி ஏதேனும் பங்குகளை வாங்குவது அல்லது விற்பது; அதிகம் அறிமுகமில்லாத நிறுவனங்களின் பங்குகள் விலை குறைவாக இருக்கின்றது என்பதற்காக வாங்கி, பின்பு அவை காணாமல் போவதால், போட்ட முதலீட்டை இழப்பது - இவற்றையெல்லாம் எப்படித் தவிர்ப்பது? அதற்கு இந்தப் புத்தகம் உதவும். பங்குச்சந்தையை எப்படி அணுகவேண்டும், அதில் எப்படிக் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்பன போன்ற அடிப்படைகளை விளக்கி இருக்கிறார் பங்குச்சந்தை ஸ்பெஷலிஸ்ட் சோம. வள்ளியப்பன்.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.