நான் முதல் முதலாய் நர்சிம்மின் கதைகளை வாசிக்கிறேன். எப்படி இவ்வளவு நாட்கள் இவரைத் தவறவிட்டேன் என மனம் கூசுகிறது. என்னவொரு இயல்பான மொழியும், வட்டார வழக்கும், கதை சொல்லும் நேர்த்தியும், அதை இதயத்தின் அடியாழத்தில் தக்க வைக்கச் சொல்லும் யாசிப்பும், அதன் தார்மீக நியாயமும், அடடா நண்பரே... பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்.
எல்லா கதைகளிலும் நர்சிம் நின்று கதை சொன்னாலும் கொஞ்சம் ஒதுங்கியே நிற்கிறார். நான் அல்ல. நான் பார்த்த வாழ்க்கை, கேட்ட வாழ்க்கை, கொட்டின வாழ்க்கை, அள்ளி சேர்த்தணைக்க முடியாத வாழ்க்கை, பதிவு செய்கிறேன் அவ்வளவுதான் என்பதான ஒதுங்கல். நிறைவாகயிருக்கிறது.
-கே.வி.ஷைலஜா
Be the first to rate this book.