ஆரம்பத்தில் ஆந்திரேய் எபீமிச் உற்சாகமாய்த்தான் வேலை செய்தார்.தினமும் மதிய உணவு நேரம் வரை நோயாளிகளைப் பரிசோதித்து மருந்து கொடுத்தும், அறுவை சிகிச்சை அளித்தும் வந்தார், தாய்மை மருத்துவம் கூட செய்தார். அவர் அக்கறையும் கவனமும் வாய்ந்தவர், நோய்களை - குறிப்பாய் பெண்கள் அல்லது குழந்தைகளின் நோய்களை தேர்ந்த முறையில் நிர்ணயம் செய்தார் என்பதாய்ச் சீமாட்டிகள் கூறினார்கள். ஆனால் மாறாத முறையில் நடைபெற்ற தமது வேலை சலிப்புத் தட்டுவதாகவும், தெளிவாகவே சிறிதும் பயன் திறனற்றதாகவும் இருந்ததைக் கண்ணுற்று நாளாவட்டத்தில் அவர் சோர்வடைந்து விட்டார்.
Be the first to rate this book.