போர், புலம்பெயர்வு, மேற்குலக வாழ்வு போன்ற சமகால நிகழ்வுகளின் தாக்கங்களினால் பாரிய சமூக, பண்பாட்டு, பொருளாதார மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் புதிய பிரதியாக ஜயகரனின் படைப்பு முக்கியம் பெறுகிறது. புதிய கதைக் களமும் கதை மாந்தர்களும் எளிய மொழி நடையும் தமிழ் வாசகர்களுக்கு மாற்று வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. அரசியல் எல்லைகள் தாண்டிப் புகலிடத்தின் புது அனுபவங்களுக்கூடாகத் தமிழ் இலக்கிய வெளிப்பாட்டில் நிலவும் எல்லைகளைத் தாண்டும் எழுத்து இது. இக்கதைகள் தமிழின் முக்கியமான படைப்புகளாகக் கொள்ளத்தக்கவையாகும்.
Be the first to rate this book.